அருள் என்பது என்ன?
வள்ளலார் கொள்கைப்படி, அருள் என்பது அன்பின் முதிர்வு. ‘அ’ என்பது இறைவனையும், ‘ரு’ என்பது 12-ஆம் நிலையையும் (துவாத சாந்தம்), ‘ல்’ என்பது 16-ஆம் நிலை ஞானத்தையும் குறிக்கிறது. 12-ஆம் நிலையில் உள்ள ஒரு உயிரை 16-ஆம் நிலைக்கு உயர்த்துவதே அருள். மரணமில்லாப் பெருவாழ்வு என்பது இறைவனிடமிருந்து பெறுவதல்ல, நாமே நம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டு அடைய வேண்டியது. சத்து விசாரணை மற்றும் தொடர் பயிற்சியின் மூலமே இந்த நிலையை நாம் அடைய முடியும்.